சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வெங்கடேசன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வெங்கடேசன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வெங்கடேசன் எம் எல் ஏ தீவிர வாக்கு சேகரிப்பு 


தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வெங்கடேசன் எம் எல் ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் காலை 7 மணிக்கு சோழவந்தான் பேரூர் 1வது வார்டு பகுதியான பேட்டை கிராமத்திற்கு வருகை தந்த வெங்கடேசன் எம் எல் ஏ விற்க்கு பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து திமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து பேட்டை கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டார் இதில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் துணைத்தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து சோழவந்தானின் அனைத்து வார்டுகளுக்கும் நடைபயணமாக சென்று ஒவ்வொரு தெருவிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார்.

வெங்கடேசன் எம் எல் ஏ வின் திடீர் வாக்கு சேகரிப்பால் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாகமடைந்தனர் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் நாண்கு நாட்களே உள்ள நிலையில் எம்எல்ஏவின் தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்களிடையே திமுகவிற்கு பெரும் ஆதரவை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்…

Tags

Next Story