பட்டுக்கோட்டையில் வெண்மணி தியாகிகள் தின கொடியேற்று நிகழ்ச்சி

பட்டுக்கோட்டையில் வெண்மணி தியாகிகள் தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாநகரக் குழு சார்பில், வர்க்கப் போரில் உயிர்நீத்த வெண்மணி தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சரவணன் செங்கொடி ஏற்றினார்.

மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி வீரவணக்க உரையாற்றினார். இதில் கட்சி மற்றும் அரங்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story