மதுவினால் வந்த வினை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மதுவினால் வந்த வினை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

காவல் நிலையம்

கரூர் அருகே மதுவினால் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கே. பிச்சம்பட்டி அருகே உள்ள கே. ஆலமரத்துப்பட்டி, குடி தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 44. பழனிச்சாமிக்கு அண்மை காலமாக மது பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் மே 4-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில்,

வெள்ளியணை தெற்கு பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சென்ற போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் தாயார் தங்கம்மாள் வயது 70 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து,

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story