ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம்

ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம்

கன்னியாகுமரியில் தி க சார்பில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்பட்டது.


கன்னியாகுமரியில் தி க சார்பில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மையத்தில் ஜாதி ஒழிப்பு போராளிகட்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள் முன்னிலை வகித்தனர். தலைவர்.சிவதாணு, திராவிட நட்புக்கழக பொறுப்பாளர்கள் முனைவர் ஆனந்த், விஷ்ணு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

திராவிடர்கழக மாநில சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி சிறப்புரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது கடவுள் மறுப்புக் கூறினார். திராவிடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். திராவிடர்கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.அலெக்சாண்டர், அமைப்பாளர் மு. இராஜசேகர், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், ஒன்றிய அமைப்பாளர், செல்லையன் , மேலராமன் புதூர் கிளைக்கழக அமைப்பாளர் பி.கென்னடி மகளிரணி தோழர் ச.ச. மணிமேகலை, வழக்கறிஞர் அப்பாஜி, சி. காப்பித்துரை, தி்முக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆன்டனி ராஜ் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மறைந்த போராளிகளுக்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் ஆயிரம் வினா_ விடைப் போட்டிக்கு ஒத்துழைத்த தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். திராவிடர்கழக கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story