குழிபிறையில் கால்நடை மருத்துவ முகாம்

குழிபிறையில் கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சைப்பெற்று பயன்பெற்றனர்.
திருமயம் ஒன்றியம் குழிபிறையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. பனையப்பட்டி கால்நடை மருத்துவ அலுவலர் விக்னேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் நாச்சம்மை முன்னிலை வகித்தார். முகாமை ஊராட்சித்தலைவர் அழகப்பன் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட ஆடு,மாடுகள், கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story