தலைவாசல் அருகே கால்நடை மருத்துவ முகாம்

தலைவாசல் அருகே கால்நடை மருத்துவ முகாம்

தலைவாசல்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம் நடந்தது. சிறப்பு மருத்துவ முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முருகவேல் தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைதாங்கினார். முகாமில் ஆண்மை நீக்கம் தடுப்பூசி போடுதல், சினை ஊசி போடப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை உதவி டாக்டர்கள் முருகவேல், அஞ்சுகம், ரத்தினவேல், கதிரவன் உள்ளிட்ட மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர். முகாமில் 300 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story