திருவையாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருவையாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம்
மருத்துவ முகாமில் 520 கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, செம்மங்குடி ஊராட்சி மடம் கிராமத்தில் திருப்பழனம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர்கள் பாலமுருகன், அருள்வேந்தன் ஆகியோர் தலைமையில் கால்நடை ஆய்வாளர் மஞ்சுளா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் இளங்கோவன் மற்றும் குழுவினர் 520 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சினை ஊசி போடுதல், மலடு நீக்க சிகிச்சை, குடற் புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செம்மங்குடி ஊராட்சி தலைவர் அம்சவள்ளி, கால் நடை மருந்தக உதவி மருத்துவர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story