ஆலத்தூர் அருள்மொழிதேவன் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

ஆலத்தூர் அருள்மொழிதேவன் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


ஆலத்தூர் அருள்மொழிதேவன் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும்,உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவுறுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை,பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல்,சினை பரிசோதனை,மலடு நீக்கம்,கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்,கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரியதர்ஷினி, முத்துக்குமரன், சிவப்பிரியா கால்நடை ஆய்வாளர் பாபுஜி,கால்நடை பராமரிப்பு உதவியாளர் வடிவேல் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story