குமாரபாளையத்தில் வேட்டி தினம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் வேட்டி தினம் கொண்டாட்டம்
வேட்டி தின கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி அமைப்பு சார்பில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில் நமது பாரம்பரியமான வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

வேட்டிதினத்தையொட்டி, மாணவர்கள் வேட்டி கட்டிக் கொண்டு வந்து வேட்டியின் பெருமைகளை உணர்த்தினார்கள். நமது நெசவாளர்களின் பணி மற்றும் திறமைகளை அழகாக மாணவர்கள் பேசினார்கள். இல்லம் தேடி கல்வி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பங்கேற்று, நெசவாளர்கள் மற்றும் வேட்டியின் சிறப்புகள் பற்றி பேசினார்.

இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ராஜாத்தி மற்றும் தீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story