வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா

திருச்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு திவ்யா குணசீலன் வரவேற்புரை வழங்கினார். ஜெயநிர்மலா சத்யா கோவிந்தராஜ் அமிர்தவல்லி சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவுக்கு அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். டி.கே எஸ் இளங்கோவன் வலையொலி ஒளி ஒளிப்பதிவை வெளியிட்டார். கழகச் செய்தி தொடர்பாளர் சிறப்பு அழைப்பாளர்கள் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன்‌ கலந்து கொண்டார். கீதா மைக்கேல் ராஜ் செல்வராஜ் நன்றியுரை வழங்கினர் . இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் சேகரன், செந்தில், செங்குட்டுவன், குணசேகரன், மூக்கன், லீலாவேலு, சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Next Story