திருமங்கலம் ஏடிஎம் மெஷினை குப்பைத் தொட்டி மூடியால் மூடிய வீடியோ வைரல்

திருமங்கலம் ஏடிஎம் மெஷினை குப்பைத் தொட்டி மூடியால் மூடிய வீடியோ வைரல்

குப்பை தொட்டி மூடியால் மூட்டபட்டி இருக்கும் ஏடிஎம் இயந்திரம்

திருமங்கலம் ஸ்டேட் பேங்க்-ல் பழுதடைந்த ஏடிஎம் மெஷின் குப்பைத் தொட்டி மூடியால் மூடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் எடுப்பதற்கு பணம் செலுத்துவதற்கு மற்றும் பாஸ்புக் பிரிண்டிங் செய்வதற்கு என்று தனியாக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் பணம் செலுத்தும் இயந்திரம் அல்லது பணம் எடுக்கும் இயந்திரம் அவ்வப்போது இணைய பிரச்சினையால் செயல்படாமல் இருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை தவிர்க்க வங்கி சார்பில் ஒரு அட்டையில் பழுது தொடர்பான வாசகங்கள் வைப்பது வழக்கம்.

இதனால் வாடிக்கையாளர்கள் அதை புரிந்து கொண்டு வேறு ஏடிஎம் மெஷின்களை பயன்படுத்துவர். இந்த நிலையில் இன்றும் ஏடிஎம் மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பணம் செலுத்தும் இயந்திரம் பழுதடைந்ததால் வழக்கமாக அட்டையில் எழுதி வைப்பதற்கு பதிலாக அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் மூடியைக் கொண்டு டெபாசிட் இயந்திரத்தை மூடி வைத்துள்ளனர்.

இதைக் கண்ட வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் செலுத்தும் இயந்திரத்தின் மீது குப்பை தொட்டி மூடியால் மூடி வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது பழுதடைந்த இயந்திரத்தின் மீது வங்கி நிர்வாகம் குப்பைத்தொட்டி மூடியால் மூடி வைத்த சம்பவம் அங்கு வந்த வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story