மொபெட்டில் தீவிர பிரச்சாரம்!

நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் படத்துடன், மொபெட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

சைக்கிள் வடிவேலு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் திருச்செங்கோடு நகரை சேர்ந்தவர் வடிவேலு. ஓட்டலில் பணியாற்றி வரும் இவர், கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும், தலையில் இரட்டை இலை சின்னம் பொருத்திய தொப்பியுடன் வலம் வருவார். ஜெயலலிதாவுக்கு நேரடியாக தெரியும் அளவுக்கு பிரபலமான தொண்டராக அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் அதிமுகவை விட்டு விலகி, திமுகவில் இணைந்துள்ளார்.நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு ஆதரவாக, தனது தலையில் உதயசூரியன் சின்னம் பொருத்திக்கொண்டு, கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் மாதேஸ்வரன் படத்துடன், மொபெட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே நாமக்கல் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் பிரச்சார யுக்தியை பாராட்டி இன்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் அவருக்கு கொமதேக கட்சி நிர்வாகிகள் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற பொறுப்பாளருமான R.S.R.துரை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் , மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ராஜா (எ) செல்வராஜ் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ, நாமக்கல் நகர் மன்ற உறுப்பினர்கள் KRT மோகன் , மாயாஸ் பழனிச்சாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story