திருச்சி: விஜயகாந்த் நலம்பெற மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

திருச்சி: விஜயகாந்த் நலம்பெற மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்
மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள் விஜயகாந்த் நலம்பெற மண் சோறு சாப்பிட்டு பிராத்தனையில் ஈடுப்பட்டனர்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன் சன்னதியிலும் விஜயகாந்த் திருமண நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் சித்திரை நட்சத்திரத்தில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அவர் மீண்டும் மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்று நடிகர் விஜய் சார்பிலும் கோவிலில் மண் சோறுசாப்பிட்டு வேண்டுதல் செய்தார்கள். விஜய் ரசிகர்கள் கூறியதாவது , நடிகர் விஜய்யின் இரண்டாவது படமாக செந்தூரப் பாண்டி திரைப்படத்திற்காக மிகவும் பிசியான நேரத்திலும் கால் சீட்டு வழங்கி விஜய்க்கும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்க்கும் உதவி புரிந்த விஜயகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை செய்தோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story