இளம் வாக்காளருடன் செல்பி எடுத்து வாக்கு சேகரித்த விஜய் வசந்த்

இளம் வாக்காளருடன் செல்பி எடுத்து வாக்கு சேகரித்த விஜய் வசந்த்

செல்பி வித் எம்பி 

நாகர்கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துடன் முதல் முறை வாக்காளர்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டாறு பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். தொடர்ந்து கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு வெளியே வந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே டி உதயம் உட்பட்ட பலர் உடன் இருந்தார்கள். தொடர்ந்து நாகர்கோவிலில் தெற்கு எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை மரியாதை செலுத்தமாக சந்தித்தார். பின்னர் நாகர்கோவில் சந்திப்பு பகுதியில் பொதுமக்கள், வியாபாரியிகளிடம் ஆசி பெற்றார். அப்போது ஏராளமான முதல்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் வேட்பாளர்கள் விஜய் வசந்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story