சுசீந்திரம் கோவிலில் விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

சுசீந்திரம் கோவிலில் விஜய் வசந்த் எம்.பி ஆய்வு
விஜய் வசந்த் எம்.பி ஆய்வு.
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் திருக்கோவில் கலையரங்கத்திற்கு மேற்கூரை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்று வரும் மேற்கூரை பணிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story