விஜயபாஸ்கர் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

விஜயபாஸ்கர் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடந்த 2016-21ம் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், கோர்ட்டில் விஜயபாஸ்கர் ஆஜரானார். முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் விசாரித்து வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story