பர்கூர் காவல் நிலையத்தில் மனமகிழ் மன்றத்தின் சார்பில் விஜயதசமி

பர்கூர் காவல் நிலையத்தில் மனமகிழ் மன்றத்தின் சார்பில் விஜயதசமி

விஜயதசமி கொண்டாட்டம்

பர்கூர் காவல் நிலையத்தில் சிறுவர் சிறுமியர் மனமகிழ் மன்றம் சார்பில் விஜயதசமி சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் சிறுவர் சிறுமியர் மனமகிழ் மன்றம் சார்பில் விஜயதசமி சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரதநாட்டியம், நடனம், பேச்சு கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பர்கூர் காவல் ஆய்வாளர் சவிதா தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி காவல் ஆய்வாளர் சவிதா வாழ்த்து தெரிவித்து பாராட்டினார் இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காவலரின் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்._

Tags

Next Story