விஜயகாந்த் மறைவு - அனைத்து கட்சியினர் மௌனஅஞ்சலி ஊர்வலம்

திருப்பூரில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
தேமுதிகவின் நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் குமரன் நினைவகத்தில் துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திமுக , அதிமுக, பாஜக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி , மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , இந்து முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story