விஜயகாந்த் மறைவு : எடப்பாடி தேமுதிகவினர் மௌன ஊர்வலம்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி எடப்பாடி நகர தேமுதிக சார்பில் புகழஞ்சலி மௌன ஊர்வலம் நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக வெள்ளாண்டி வலசு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக சென்று எடப்பாடி பஸ் நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,அவரது வழியில் அவரது எண்ணம் நிறைவேறும் வகையில் கட்சி தலைமை ஆணைக்கிணங்க மக்களுக்கு பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கழகச் மகளிர் அணி செயலாளர் மாலதிவினோத், மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் பாலாஜி, ரமேஷ், செல்வராஜ், அமுதா, எடப்பாடி ஒன்றிய செயலாளர் மெய்வேல், எடப்பாடி நகர செயலாளர் ஜீவா, கேப்டன் மன்ற செயலாளர் கனகராஜ் மற்றும் ஒன்றியம் நகர பொறுப்பாளர்கள் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story