மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் ரசிகர்கள்

மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் ரசிகர்கள்

சேலம் அருகே மொட்டை அடித்து தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சேலம் அருகே மொட்டை அடித்து தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையொட்டி அவருடைய ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்களான ஆட்டோ கிருஷ்ணன், ஜேம்ஸ், வெங்கடேசன், ராஜா, செந்தில்குமார், பழனிசாமி ஆகிய 6 பேர் நேற்று மாலை விஜயகாந்த் மறைவையொட்டி தங்களது தந்தைக்கு செய்யும் ஈமச்சடங்கு எனக்கூறி மொட்டை அடித்து முத்தம்பட்டி பகுதியில் பேனர் வைத்து மாலையிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவிற்கு அவரது ரசிகர்கள் மதங்களை கடந்து மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story