விஜயகாந்த் மறைவு - மாணிக்கம் தாகூர் எம்.பி இரங்கல்

விஜயகாந்த் மறைவு - மாணிக்கம் தாகூர் எம்.பி இரங்கல்
விஜயகாந்த் 
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்தார்.
தேமுதிக கட்சியில் நிறுவனத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார். தமிழகம் முழுவதும் தேமுதிக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் இரங்கல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாகவும் அருப்புக்கோட்டையில் பிறந்து அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று மாநகர் மதுரையில் வளர்ந்து கலைத்துறையிலும் அரசியலிலும் சாதனை புரிந்த தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த பண்பாளராய் அன்பாளராய் நெறியாளராய் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மாமதுரையில் உருவச்சிலை நிறுவி அவருக்கு நிலைத்த புகழைத் தர வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்தார்.

Tags

Next Story