விஜயகாந்த் மறைவு - வேல்முருகன் இரங்கல்

விஜயகாந்த் மறைவு - வேல்முருகன் இரங்கல்

வேல்முருகன் எம் எல் ஏ 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார் என்கின்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் தொட்டு புகழ் பெற்ற நடிகராக விளங்கிய காலத்திலும் ஏழை எளியவர் மற்றும் சக கலை உலகத்தினருக்கு பல்வேறு உதவிகளை செய்து அவர்களது பசி போக்கிட தனது வாழ்நாள் இறுதி வரையில் "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு" என்கிற முழக்கத்தை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்ட அவரது இறப்பு தமிழ் சினிமா உலகத்தினருக்கும் தேமுதிக கட்சியினருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரோடு ஐந்தாண்டு காலம் நான் சட்டமன்றத்தில் பணியாற்றியபோது பழகுவதற்கு இனியவராக இருந்த அவரை இழந்து வாடும் அவரது மனைவி,மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும்,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் சினிமா உலகத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story