விஜயகாந்த் மறைவு: கடைகள் அடைப்பு

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு தம்மம்பட்டி வணிகர் சங்கம் சார்பில், 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியே மவுன ஊர்வலம் நடந்தது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு அனைத்து கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடந்தது. அனைத்து கட்சியினர், விஜயகாந்தின் படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோல் தம்மம்பட்டி வணிகர் சங்கம் சார்பில், 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து முக்கிய வீதிகள் வழியே மவுன ஊர்வலம் சென்றனர். தே.மு.தி.க., தொண்டர்கள், 4 பேர் மொட்டை அடித்தனர் விஜயகாந்த் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story