விஜயகாந்த் மறைவு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அஞ்சலி

விஜயகாந்த் மறைவு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அஞ்சலி

அஞ்சலி 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆணைப்படி மாவட்ட செயலாளர் நெப்போலியன் தலைமையில் மறைந்த தேமுதிக கட்சி தலைவர் மற்றும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் பேனர் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் விமல் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பரதன், ஒன்றிய செயலாளர் நித்திய குமார், நகர செயலாளர் அறிவழகன், வினோத் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story