விஜயகாந்த் மறைவு - பூர்வீக கிராமத்தில் அஞ்சலி

விஜயகாந்த்தின் பூர்வீக ஊரான ராமானுஜபுரத்தில் விஜயகாந்த் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நல குறைவால் காலமானார். விஜயகாந்த் மறைவு பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே விஜயகாந்த் பூர்வீக ஊரான ராமானுஜபுரத்தில் சோகம் சூழ்ந்து காணப்படுகிறது. விஜயகாந்தின் பூர்விக ஊரானா ராமானுஜபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. மேலும் கட்சிக் கொடியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு ஊர்க்காரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த கட்சிக்கொடி ஆனது அவரது பூர்வீக இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் காலமான செய்தி அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார். கோவிலுக்கு அன்னதானம் நிறைய வழங்குவார் அவர் இறந்துள்ள செய்தி எங்களுக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவரது ஊர்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story