விஜயகாந்த் மறைவு: மௌன அஞ்சலி ஊர்வலம்

விஜயகாந்த் மறைவு: மௌன அஞ்சலி ஊர்வலம்

மேலூரில் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.  

மேலூரில் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

மேலூரில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு மௌன அஞ்சலி ஊர்வலம். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஒரு கிலோமீட்டருக்கு மேலாக மழையில் நனைந்தபடி மௌனமாக ஊர்வலம் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் சென்னையில் தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னையில், அவரது உடல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில், தேமுதிகவினர் மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் வரை மௌனமாக ஊர்வலம் வந்தனர். இந்த அமைதி ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களில், பரவலாக மழை பெய்த போதும். அதை பொருட்படுத்தாமல் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.... இதில், தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டு மறைந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்....

Tags

Next Story