விஜயகாந்த் மறைவு - காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ இரங்கல்

விஜயகாந்த் மறைவு - காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ இரங்கல்

சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் இரங்கல் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மக்கள் நலக்கூட்டணியில் புவனகிரி தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்காக நேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். திரை கலைஞனாகவும் , அரசியல் தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியன. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story