விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : போலீசார் கொடி அணிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : போலீசார் கொடி அணிவிப்பு

கொடி அணிவகுப்பு 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் அறிவுறுத்தலின்படி, காணை காவல் சரகத்துக்குள்பட்ட கல்பட்டு, மாம்பழப்பட்டு ஆகிய கிராமப் பகுதிகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் துணை ராணுவத்தினா் மற்றும் மாவட்ட போலீஸாா் பங்கேற்றனா்.விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரேவதி, உதவி ஆய்வாளா் தீபன் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story