விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 56 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 56 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

வட்டாச்சியர் அலுவலகம் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (திங்கட்கிழமை), விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள்(புதன்கிழமை) கடைசி நாளாகும். அன் றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.

Tags

Next Story