விக்கிரவாண்டி பகுதியில் கண்காணிப்புக்குழு வாகன சோதனை

விக்கிரவாண்டி பகுதியில்   கண்காணிப்புக்குழு வாகன சோதனை

விக்கிரவாண்டி பகுதியில் துணை ராணுவத்தினருடன் நிலை கண்காணிப்புக்குழு வாகன சோதனை நடத்தினர்.


விக்கிரவாண்டி பகுதியில் துணை ராணுவத்தினருடன் நிலை கண்காணிப்புக்குழு வாகன சோதனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் சுரேஷ், தெய்வானை மற்றும் துணை ராணுவ கேப்டன் தேவேந்திர சிங் தலைமையிலான ராணுவ வீரர்கள் அந்த வழியாக வந்த கார், லாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story