கோட்டை மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

கோட்டை மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

விளக்கு பூஜை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு பெற்றது. இந்த நிலையில் உலக நன்மைக்காக சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி இதனையடுத்து பெண்கள் 108விளக்கு பூஜையில் கலந்து கொண்டு குடும்பம் செழிக்கவும் உலக மக்கள் நன்மை வேண்டியும் விளக்கு பூஜை செய்யப்பட்டது.

Tags

Next Story