விளவங்கோடு : வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

விளவங்கோடு : வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

 சின்னங்கள் ஒதுக்கீடு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் தேசிய கட்சிகளான காங்.சார்பில் கை சின்னத் தில் தாரகை கத்பர்ட், பா.ஜ., சார்பில் தாமரை சின்னத்தில் நந்தினி, அ.தி.மு.க., சார்பில் இரட்டை இலைசின்னத்தில் ராணி ஆகியோர் போட்டி இடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வரிசையில் நாம் தமிழர் கட்சி சார்பில், ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் ஜெமினி போட்டி இடுகிறார். சுயேச்சை வேட்பாளர்கள் ஓம் பிரகாஷ் மோதிரம் சின்னத்திலும், மணவை கண்ணன் பானை சின்னத்திலும், தங்கப்பன் கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், மோகன் குமார் ஆட்டோ சின் னத்திலும், விஜய குமார் தையல் இயந்திரம் சின்னத்திலும், ஷாஜி மின்கல விளக்கு சின்னத்திலும் போட்டி இடுகின்றனர்.

Tags

Next Story