மழை வேண்டி சிறப்பு யாகம்

மழை வேண்டி  சிறப்பு யாகம்

மழை வேண்டி யாகம்

குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் மழை வேண்டி சிறப்பு யாகம் சிவாச்சாரியார் சுப்பு தலைமையில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் பல நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும்கோடை வெப்பத்தில் அனைத்து தரப்பினரும் களைப்பு நீங்கிட, இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு, பழச்சாறு, உள்ளிட்ட கடைகளில் திரண்டனர். இளநீர், பழங்கள் விலை அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்துகொண்டுள்ளனர்.

மழை இல்லாததால், கடும் வெப்பத்தால் அனைத்து வயதினரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கோட்டைமேடு பகுதியில் சில நாட்கள் முன்பு, பெண்கள் பலர் அரிசி தானமாக பெற்று, மழை பாட்டு பாடி, மழைக்கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிலையில் நாராயண நகர் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் மழை வேண்டி சிறப்பு யாகம், சிவாச்சாரியார் சுப்பு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டனர்.

Tags

Next Story