கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம் 

நெமிலியில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் வட்ட சங்கத்தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் சார்பில் நெமிலி தாலுகாவில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நெமிலி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவராக பூபாலன், செயலாளராக ரஞ்சித்குமார், பொருளாளராக நாகராஜ், துணைத்தலைவராக குமார் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story