வாணாபுரமில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வாணாபுரமில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா, தலைமை நிலை செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் ரஞ்சித் வரவேற்றார். வி.ஏ.ஓ.,க்களிடம் பணி விரோத போக்குடன் பணிபுரியும் மணலுார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆனந்தசுதனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், செயல்தலைவர் முருகன், மாவட்ட இணைச்செயலாளர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் விஜயபாரதி, வாணாபுரம் வட்ட தலைவர் சரவணன், வட்ட செயலாளர் மணிகண்டன், பொறுப்பாளர் கோவிந்தராஜிலு உட்பட பல்வேறு வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story