சென்னீர் குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சென்னீர் குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட சென்னீர் குப்பம் ஊராட்சியில் எல்லார்க்கும் எல்லாம் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.

கிராம சபை கூட்டத்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பொதுமக்களுடைய குறைகளை கேட்டறிந்து கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்ட துறை சார்ந்த அலுவலர்களிடத்தில் உடனடியாக அதற்கான விளக்கத்தையும் கேட்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையினை உடனடியாக எடுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தமிழகத்தின் மக்களுக்காக 20 மணிநேரமும் அயராமல் உழைத்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் நம் தளபதி மட்டும்தான் என மக்களிடத்தில் பேசினார். மக்களுடைய தேவைகளை அறிந்து பல்வேறு சிறப்பான திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார் என தெரிவித்தார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கமலேஷ், சேர்மேன் ஜெயக்குமார், துண சேர்மேன் பரமேஷ்வரி கந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story