கிராம சபை கூட்டம்- ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பெண்கள்

கிராம சபை கூட்டம்- ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பெண்கள்

கிராம சபை கூட்டம் 

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஒன்பதாவது வார்டு மெம்பராக இருப்பவர் கண்ணகி. இவரது வார்டு பெண்கள் எங்கள் வார்டில் தண்ணீர் வருவதில்லை, கொஞ்சம் மழை பெய்தாலும் தெருக்கள் முழுதும் சேரும் சகதியுமாக ஆகிவிடுகிறது. குடிநீர் வருவதில்லை கொசு அதிகமான காரணத்தினால் பிள்ளைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது இனம் புரியாத காய்ச்சலால் அவதிப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றனர். ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அனைத்தும் கேட்டுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த குறைகள் அனைத்தும் விரைந்து சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story