செஞ்சியில் கிராம உதவியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

செஞ்சியில் கிராம உதவியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
செஞ்சியில் கிராம உதவியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
விடுப்பு கடிதத்தை செஞ்சி துணை தாசில்தாரிடம் வழங்கினர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அவர்கள் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செஞ்சி தாலுகாவில் வட்ட கிராம உதவியாளர் சங்கத்தலைவர் தலைமையில் 114 கிராம உதவியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தங்கள் சிறு விடுப்பு கடிதத்தை செஞ்சி துணை தாசில்தாரிடம் அளித்தனர்.

Tags

Next Story