நத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

நத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல் 

நத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி ஆண்டிபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் வரவில்லை என்றும் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இக்கிராமத்தைச் சே ர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து கோட்டையூர் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் காலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை சுமார் 30 நிமிடம் நடந்தது.இதனால் கோட்டையூர் மற்றும் நத்தம் செல்லும் போக்குவரத்து தடைபட்டதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story