குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

கோத்தகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 3 வார்டுக்கு உட்பட்ட கன்னேரிமுக்கு கிராமத்தில் 70 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் கோத்தகிரி பேரூராட்சிக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் கன்னேரிமுக்கு பகுதிக்கு விரைந்து வந்து பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து தங்களுக்கு இன்று குடிதண்ணீர் வர ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி அளித்தல் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதனால் இரண்டு மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story