வீட்டு பட்டா வழங்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வீட்டு பட்டா வழங்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு

மயிலாடுதுறை அருகே இளையாளூர் ஊராட்சியில் வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாககூறி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் மற்றும் கருப்பு கொடி ஏந்தியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இளையாளூர் ஊராட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இளையாளூர் ஊராட்சி புதுத்தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மூன்று தலைமுறையாக குடியிருப்பு வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேர்தல் போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்காக வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் கூறி வாக்குறுதிகளை பெறுவதாகவும் அதன்பிறகு இப்பகுதிக்கு வருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இலல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், எங்கள் பகுதிக்கு வேட்பாளர்கள் யாரும் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் எனவும், எங்களுடைய வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, குடும்மப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது‌.

Tags

Next Story