சிவஸ்ரீ செல்லம் சுவாமிகள் குருபூஜை விழாவை கிராம மக்கள் கொண்டாடினர்

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அமைந்துள்ளது சிவஸ்ரீ செல்லம் சுவாமிகள் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவை கிராம மக்கள் கொண்டாடினர்

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது சிவஸ்ரீ செல்லம் சுவாமிகள் நினைவிடம் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர் நினைவிடத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

சிவாச்சாரியார்கள் ஓம குண்டத்தில் பல்வேறு பூஜைகள் செய்தனர் அதன் பின்பு வாலாந்தரவை, அண்ணா நகர், வழுதூர், உடைச்சியார் வலசை தெற்கு காட்டூர் தெற்கூர், போலயன் நகர், அளம், மொட்டையன் வலசை ஏந்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பகலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை சிவஸ்ரீ செல்லம் சுவாமிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் செவத்தான் குடும்பத்தினர் செய்திருந்தனர்

Tags

Next Story