சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சாலை

பாதியில் நிறுத்தப்பட்ட சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டிக்கு செல்லும் ரோடு அமைத்து 20 வருடங்களுக்கு மேலானதால் குண்டும், குழியுமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த ரோட்டை சீரமைக்கும் பணி துவங்கி ஜல்லி மட்டும் பரப்பியுள்ளனர். அடுத்த கட்ட பணி துவங்காத காரணத்தினால் மக்கள் இவ்வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நீண்ட காலமாக ரோட்டை சீரமைக்க போராடி வருகிறோம். பணி துவங்கிய நிலையில் பாதியில் விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொங்கம்பட்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story