புரட்சிக் கலைஞர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமத்தினர்

புரட்சிக் கலைஞர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமத்தினர்

விஜயகாந்திற்கு அஞ்சலி 

உப்பிடமங்கலத்தில்,மக்கள் தலைவர்,புரட்சிக் கலைஞர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமத்தினர்

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை உருவாக்கி, தன்னிகரற்ற நடிகராக மக்கள் மனங்களில் குடி கொண்ட புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நலம் குன்றி சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அவரால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பின்னாளில், கேப்டன் விஜயகாந்த்தால் வார்த்தெடுக்கப்பட்ட கட்சியினராக மாறிய ரசிகர்கள், தனது மனம் கவர்ந்த தலைவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, உப்பிடமங்கலம் கடைவீதியில், உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் வேலுசாமி தலைமையில், கேப்டன் விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, கிராமத்து பாணியில் ரேடியோ செட் கட்டி தேங்காய்பழம் உடைத்து, ஆராதனை செய்து, மலர் தூவி தங்களது மனம் கவர்ந்த தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிந்தனை சக்திவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் பேரூர் கழக அவை தலைவர் கண்ணப்பன், முன்னாள் பேரூர் கழக துணை செயலாளர் ராமசாமி, பேரூர் கழக துணை செயலாளர்கள் ராமலிங்கம், திருப்பதி, இளைஞரணி செயலாளர் மணிகண்ட பிரபு உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story