சிமெண்ட் தொழிற்சாலை முன்பு கிராம மக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பாக போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாத்தபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கமலேஷ் கிரீன்கிரிட் பிரைவேட் லிமிடெட் தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது தொழிற்சாலை அமைய கிராம மக்கள் நிலம் வழங்கினர் நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு கற்களை ‌ ஏற்றி அனுப்பும் பணி வாகனங்கள் பயன்படுத்தும் பணி வழங்குவதாக தெரிவித்து தொடர்ந்து பணிகளை வழங்கி வந்த நிலையில் தற்போது திடீரென பணிகள் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் தொழிற்சாலை வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென பணி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story