சூறாவளி காற்றில் சாய்ந்த மரம் - மின் வெட்டால் இருளில் மூழ்கிய கிராமங்கள்

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றில் மின் கம்பத்தின் மீது தென்னை மரம் சாய்ந்ததில் மாதனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்ட மின்தடையால் இரவு முழுவதும் கிராம மக்கள் அவதி பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாதனூர் பகுதியில் சூறாவளி காற்றில் தென்னை மரம் ஒன்று மின் கம்பத்தின் மீது சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இரவு சுமார் 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

Tags

Next Story