விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

மக்கள் தொடர்பு அலுவலர்

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நாகராஜபூபதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பொருட்காட்சி பிரிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பெ.சதீஷ், விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவல ராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவ ருக்கு அரசுத்துறை அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, புதியதாக பொறுப்பேற்ற செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ், மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story