விழுப்புரம் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி பலி

விழுப்புரம் பாம்பு கடித்து   கூலித் தொழிலாளி பலி

கோப்பு படம் 

விழுப்புரம் அருகே பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

விழுப்புரம் அருகே பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார். விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் அருண்குமார்(22) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி காலை இயற்கை உபாதைக்காக சென்றபோது பாம்பு கடித்துவிட்டது.

உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் 29ம் தேதி இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story