விழுப்புரம் : குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

விழுப்புரம் :  குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

பைல் படம் 

விழுப்புரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதூர் கோடித்தெருவை சேர்ந்தவர் மணி மகன் அன்பரசன் என்கிற அன்பு (வயது 22). இவர் மீது தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 27.2.2024 அன்று வி.மருதூர் கோடித்தெரு வில் வசிக்கும் அன்பரசனின் சித்தியிடம் வெங்கடேசன் என்பவர் தகராறு செய்ததால் அவரை கொலை வெறியுடன் அன்பரசன் தாக்கினார். இதனால் அன்பரசன் மீது விழுப்புரம் நகர போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, அன்பரசன் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்புச்சட்டத் தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் பரிந்துரை செய்தார். இதையடுத்து அன்பரசனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் அன்பரசனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story