திருவப்பூரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

புதுக்கோட்டை திருவப்பூரில் மாவட்ட பாஜ கட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

புதுக்கோட்டை திருவப்பூரில் மாவட்ட பாஜ கட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலையில் வைக்கப் பட்டிருந்த புனிதநீர் குடங்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநில அமைப்பு செயலர் கேசவ விநாய கம்,மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், துணைத்தலைவர் புரட்சி கவிதாசன், மாவட்டத் தலைவர்கள் விஜயகுமார் (மேற்கு), ஜெகதீசன் (கிழக்கு), பொருளாதார பிரிவு மாநில செயலர் மணி கண்டன், தரவு மேலாண்மை பிரிவு செயலர் கார்த்திகேயன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் குமார், பொதுச் செயலர்கள் ஏவிசிசி கணேசன், குரு ஸ்ரீராம், சண்முகசுந்தரம், பொருளாளர் முருகானந்தம், சிஎஸ்கே குளோபல் பவுன்டேசன் நிறுவனர் சித்திரை செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story